Friday, September 23, 2011

விடியல்



இன்டிபென்டென்ட் 
சுதந்திரம் 
விடுதலை......
என்றெல்லாம் 
பெயர்கள் இருந்தாலும் 
எங்கள் மொழியில் 
"..அம்பேத்கர்.." 

உரிமை














தன்மானத்தின்
சின்னங்கள்
தடியும்...
தாடியும்...

Wednesday, September 14, 2011

அழகு


கை கால் முளைத்த கஜல் காஜல்

சினிமாக்காரர்களைப் பற்றிய சினிமாத்தனமில்லாத கதை

வரலாறு "கிமு -கிபி " யாக இருப்பதைப் போல திரையுலகம் "திமு -திபி "யாக இருக்கிறது .திரைக்கு முன்னால்...திரைக்கு பின்னால் என. திரைக்கு முன்னாலிருக்கும் கதைகளை பலப் படங்கள் வேண்டிய அளவிற்கும் அதிகமாகவே பேசி இருக்கின்றன . ஆனால் 'திரையை ' ப் பற்றி ... திரைக்குப் பின்னால் இருக்கும் கதைகளை மிகச் சிலப் படங்களே பேசி இருக்கின்றன . அப்படி ... திரைக்குப் பின்னால் இருக்கும் கதையொன்றை துணிந்துப் பேசுகிறது இப்படம் -கேமரா கவிஞர் பாலுமகேந்திராவின் "மறுபடியும்".

ஒரு திரைப்பட இயக்குனர் .அவரின் மனைவி .அந்த இயக்குனரால் முன்னனிக்கு வந்த ஒரு திரைப்பட நடிகை .இந்த மூவரைச் சுற்றியும் கதை பின்னப் பட்டிருக்கிறது அல்லது கதைக்குள் இந்த மூவரும் பிரதனமாயிருக்கிரார்கள் . இயக்குனருக்கும் அவர் மனைவிக்குமான குடும்ப வாழ்வில் இருந்து தொடங்குகிறது படம் . இயக்குனருக்காக அனைத்து உறவுகளையும் உதறித்தள்ளிவிட்டு வந்திருக்கிறாள் அவள் மனைவி துளசி.

துளசி அன்பும் அழகும் கொண்ட பாத்திரமாக உலா வருகிறாள் . மிகுந்த ரசனைக்காரியாக இருக்கிறாள் . வேலைக்காரி அடிக்கும் பகடிக்கு வாய் விட்டு ரசித்துச் சிரிக்கிறாள் . உணர்வுகளின் உறைவிடமாக இருக்கிறாள் . அறிமுகம் இல்லாத நபரிடம் தன் கணவர் வாங்கித் தந்த சொந்த வீட்டைப் பற்றி சிலாகிக்கும் இடத்தில் சிறுமியாகிறாள். பூச்செடிகளை சேகரித்துப், பராமரிக்கையில் பெண்ணாகிறாள் . குயிலுடன் கூ .. கூ.. வென பேசும் காட்சியில் தாயாகிறாள் . குயிலுக்கும் துளசிக்குமான கூ .. கூ.. காட்சி மயில் தன் தோகையை விரிப்பதைப் போல் நம் மனதில் வண்ணங்களை அள்ளித் தெளிக்கிறது. It is one of the wonderful poems that i ever read.











Monday, September 12, 2011

வரலாறு

பிறப்பு 
என் தொடக்கமாக இருக்கலாம் 
மரணம்
 என் முடிவாக இருக்காது